K. J. Yesudas feat. S. Janaki - Ramanin Mohanam - From "Nettrikkan" paroles de chanson

paroles de chanson Ramanin Mohanam - From "Nettrikkan" - S. Janaki , K. J. Yesudas




ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடமும் வலமும் இரண்டு
உடலும் மனமும்
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு
இடையும் கொடியும் குலுங்கும்
நடையும் மொழியும்
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழைப்பருவம்
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம்
காதல் மங்களம்
தெய்வீகமே உறவு



Writer(s): KANNADHASAN, ILAIYARAAJA



Attention! N'hésitez pas à laisser des commentaires.