A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Sadhana Sargam - Medhuvaagathaan текст песни

Текст песни Medhuvaagathaan - A.R. Rahman, S. P. Balasubrahmanyam & Sadhana Sargam




மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் பழி வாங்கவா
மயிலாசன மருவிதழ் நானே
மழை மேகமாய் இறங்கி வந்தேனே
உன் விழி ஓரத்தில் விழுந்து விட்டேனே நான்
மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா
அன்னம் மட வண்ணம்
அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு
எட்டும் திசை எட்டும்
தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே
கொடி வேண்டுமா குடை வேண்டுமா
உன் மடி போல யாவும் சுகம் நல்குமா
படை வேண்டுமா பகை வேண்டுமா
உனைப் போல் வீழ்த்த ஆள் ஏது
எனை வெல்ல யாரும் இல்லை
உனையின்றி திசைகள் வெல்லும் இசையே
ஆதி அந்தம் ஆகி வந்த ஜோதி இந்த அழகன்
வானம் தாண்டி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர் தான் இவளல்லவா
ஆதி அந்தம் ஆகி வந்த ஜோதி இந்த அழகன்
வானம் தாண்டி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர் தான் இவளல்லவா
ராணா... ராணா...
என்னைக் கொஞ்சு ராணா
உன்னை மிஞ்ச ஆணா
அழகு போகும் வீணா
நேரம் போக்க வேணா
தொட்டு வந்த முல்லை விட்டு வைத்ததில்லை
கொஞ்சும் அன்புத் தொல்லை
காட்டும் இன்ப எல்லை
ஜாரே ஜாரே...
ஆதி அந்தம் ஆகி வந்த ஜோதி இந்த அழகன்
வானம் தாண்டி வையம் கொண்ட
ஏதன் தோட்ட மலர் தான் இவளல்லவா
அன்னம் மட வண்ணம்
அழகைச் சிந்தும் அரவிந்தம்
மஞ்சம் எழுதா மன்மதம் இவள் அழகு
எட்டும் திசை எட்டும்
தினம் கட்டும் பரிவட்டம்
இன்னும் சொல்ல மொழி இல்லையே
கொடி வேண்டுமா குடை வேண்டுமா
உன் மார் போல யாவும் சுகம் நல்குமா
படை வேண்டுமா பகை வேண்டுமா
உனைப் போல் வீழ்த்த ஆள் ஏது
மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈராக்கிறாய் பழி வாங்கவா
மெதுவாகத் தான் மெதுவாகத் தான்
எனை ஈர்க்கிறாய் எனை வாங்கவா



Авторы: VAALEE, A R RAHMAN



Внимание! Не стесняйтесь оставлять отзывы.