K. J. Yesudas - Anbe Vaa Arugile (From "Kilipetchu Ketkava") текст песни

Текст песни Anbe Vaa Arugile (From "Kilipetchu Ketkava") - K. J. Yesudas




அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
இத்தனை நாள் வாய் மொழிந்த
சித்திரமே இப்பொழுது
மௌனம் ஏன் தானோ
மின்னலென மின்னி விட்டு
கண் மறைவாய் சென்று விட்ட
மாயம் நீ தானோ
உன்னால் வந்த காதல்
உன்னால் தானே வாழும்
என்னை நீங்கி போனால்
உன்னை சேரும் பாவம்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உள்ளத்துக்குள் உள்ளிருந்து
மெல்ல மெல்ல கொல்லுவது
காதல் நோய் தானோ
வைகை என பொய்கை என
மையலிலே எண்ணியது
கானல் நீர் தானோ
என்னை நீயும் தூண்ட
எண்ண கோலம் போட்டேன்
மீண்டும் கோலம் போட
உன்னைத் தானே கேட்டேன்
எனக்கொரு அடைக்கலம்
வழங்குமோ உன் இதயமே
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே
உல்லாச மாளிகை மாளிகை
எங்கே என் தேவதை தேவதை
நீ தானே வேண்டும் என்று ஏங்கினேன்
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்
அன்பே வா அருகிலே
என் வாசல் வழியிலே




Внимание! Не стесняйтесь оставлять отзывы.