Текст песни Allithantha Bhoomi - From "Nandu" - Malaysia Vasudevan
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம் தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் மாதெனும் தேனோ
விரியும் பூக்கள் வானங்கள்
விசிரியாகும் நாணல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சி படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

Внимание! Не стесняйтесь оставлять отзывы.