Текст песни




கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடி
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா
கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே
சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று
காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்.ஓஹோ.ஓ
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ



Авторы: yuvan shankar raja



Внимание! Не стесняйтесь оставлять отзывы.
Загрузка
Загрузка