Ilayaraja - Chittukku Chella Chittuku Lyrics

Lyrics Chittukku Chella Chittuku - K. J. Yesudas




சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை
நாம் போடும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பதா வேஷம் என்பதா
காலம் செய்த கோலம்
பாசம் என்பதா வேஷம் என்பதா
காலம் செய்த கோலம்
கூடி வாழ கூடுதேடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம்
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னிப் பாவை
பாச தீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்
அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே
தொடர்கதையா சிறுகதையா
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு
ஒரு சிறகு முளைத்தது



Writer(s): Vaali, Ilaiyaraaja, Muthulingam, Vairamuthu Ramasamy Thevar, Kamarajan Na, Amaren Gangai



Attention! Feel free to leave feedback.