Chitra and Anuradha Sriram - Mallikaiye Mallikaiye Lyrics

Lyrics Mallikaiye Mallikaiye - Chitra and Anuradha Sriram




மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு (2)
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளங்கவர் கள்வனா?
குறும்புகளில் மன்னனா?
மன்மதனின் தோழனா?
ராமனா?
அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
கண்கள் மட்டும் பேசுமா, கைகள் கூட பேசுமா உன் காதல் கதை என்னம்மா
உன்னை பார்த்த மாமனின் கண்கள் என்ன சொன்னதோ மறைக்காமல் அதை சொல்லம்மா
பக்கம் வந்தானா?
முத்தம் தந்தானா?
கண் அடித்தானா?
கட்டிப்பிடித்தானா?
அவன் பார்க்கும் போது உடல் வண்ணம் மாறும் அழகே
சரி தான் இது காதலின் அறிகுறி தான்
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
மாமன் ஜாடை என்னடி கொஞ்சம் சொல்லு கண்மணி
புது வெட்கம் கூடாதடி
காதல் பேசும் பூங்கிளி உந்தன் ஆளை சொல்லடி
நீ மட்டும் நழுவாதடி
அவன் முகம் பார்த்தால் அது பசி போக்கும்
அவன் நிறம் பார்த்தால் நெஞ்சம் பூ பூக்கும்
உந்தன் கண் இரண்டில் மின்னும் வெட்கம் பார்த்து அறிவேன்
சொல்லு உந்தன் காதலன் யாரம்மா
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன் யார் சொல்லு சொல்லு
உள்ளங்கவர் கள்வனா?
குறும்புகளில் மன்னனா?
மன்மதனின் தோழனா?
ராமனா?
அவன் முகவரி சொல்லடி



Writer(s): Palani Bharathi



Attention! Feel free to leave feedback.