S. P. Balasubrahmanyam & A. R. Rahman - Engae Pogudho Vaanam (From "Kochadaiiyaan") paroles de chanson

paroles de chanson Engae Pogudho Vaanam (From "Kochadaiiyaan") - S. P. Balasubrahmanyam & A. R. Rahman



எங்கே போகுதோ
வானம் எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது வெற்றிச்
சங்கொலி என்றுமே ஓயாது
ஓயாது
ஹே உனது
வாளால் ஒரு சூரியனை
உண்டாக்கு ஹோ ஹோ
ஹே எனது தோழா நம்
தாய்நாட்டைப் பொன்னாக்கு
ஆகாயம் தடுத்தால்
பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால்
தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால்
காற்றாய்ப் போவோம்
கடலே தடுத்தால்
மீன்கள் ஆவோம்
தீரா வைரம்
உன் நெஞ்சம் நெஞ்சம்
நெஞ்சம் வெற்றி உன்னை
வந்து கெஞ்சும் கெஞ்சும்
கெஞ்சும்
இலட்சியம் என்பதெல்லாம்
வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம்
வாள் கண்டு பிறப்பதடா
எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா
எந்தன் வில்லும்
சொல்லிய சொல்லும்
எந்த நாளும்
பொய்த்ததில்லை
இளைய சிங்கமே
எழுந்து போராடு போராடு
தீரா வைரம் உன் நெஞ்சம்
நெஞ்சம் நெஞ்சம் வெற்றி
உன்னை வந்து கெஞ்சும்
கெஞ்சும் கெஞ்சும்
உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து
விட்டேன் வாழ்த்திய
மணங்களுக்கு என்
வாழ்க்கையே வழங்கி
விட்டேன்
ஹே உனது
வாளால் ஒரு சூரியனை
உண்டாக்கு ஹோ ஹோ
ஹே எனது தோழா நம்
தாய்நாட்டைப் பொன்னாக்கு
எங்கே போகுதோ
வானம் அங்கே போகிறோம்
நாமும்
வாழ்வில் மீண்டாய்
வையம் வென்றாய் எல்லை
உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள்
என்றுமே தீராது வெற்றிச்
சங்கொலி என்றுமே ஓயாது
ஓயாது



Writer(s): A R RAHMAN, VAIRAMUTHU


Attention! N'hésitez pas à laisser des commentaires.