S P Balasubrahmanyam, S Janaki - Chinna Chiru Kilieye Chithira paroles de chanson

paroles de chanson Chinna Chiru Kilieye Chithira - S P Balasubrahmanyam, S Janaki




ஆரிராரிரோ, ஆரிராரிரோ
ஆரிராரிரோ, ஆரிராரிரோ
ஆரிராரிரோ, ஆரிராரிரோ
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
அன்னை மனம் ஏங்கும்
தந்தை மனம் தூங்கும்
நாடகம் ஏனடா?
நியாயத்தை கேளடா
சின்னஞ்சிறு கிளியே
சுகமே நினைத்து
சுயவராம் தேடி
சூழல் மேல் தவிக்கும்
துயரங்கள் கோடி
மழை நீர் மேகம்
விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ?
அன்பு வழி சேருமோ?
கண் கலங்கி பாடும் எனது
பாசம் உனக்கு வேஷமோ?
வாழ்ந்தது போதுமடா
வாழ்க்கை இனி ஏன்?
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூ விழியே
உன்னை எண்ணி நாளும்
உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா
வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே
மயிலே உன்னை நான்
மயக்கவும் இல்லை
மனதால் என்றும்
வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி
இணைந்தது பாவம்
எல்லாம் நீயே
எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை
யார் அறிவாரோ?
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூவிழியே
உன்னை எண்ணி நாளும்
உள்ளம் தடுமாறும்
நாடகம் ஏனடா?
நியாயத்தை கேளடா
சின்னஞ்சிறு கிளியே
சித்திர பூவிழியே



Writer(s): Ilayaraja, Muthulingam, Pulamaipithan, Kamarajan Na



Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}